Tue. Sep 16th, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 475 பணியிடங்கள் / 475 vacancies in Indian Oil Company

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 475 பணியிடங்கள் / 475 vacancies in Indian Oil Company

ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவரா நீங்கள்? இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1 வருட தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழிற்பிரிவு, டெக்னீஷியன், பட்டப்படிப்பு தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். மொத்தம் 475 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்தியன் ஆயில் தொழிற்பயிற்சி விவரங்கள்

பதவியின் பெயர்பணியிடங்கள்
தொழிற்பிரிவு அப்ரண்டிஸ்80
டெக்னீஷியன் அப்ரண்டிஸ்95
பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்300
மொத்தம்475
  • தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் பிரிவில் பிட்டர், எலெக்ட்ரிஷன், எலெக்ட்ரிக்கல் மெக்கானிக், இன்ஸ்ரூமெண் மெக்கானிக், மெக்கானிஸ்ட், பிட்டர், எலெக்ட்ரிஷன் ஆகிய தொழில்களின் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகள் நிரப்பப்படுகிறது.
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கான ஆகிய மாநிலங்களில் தொழிற்பயிற்சி இடங்கள் நிரப்பப்படுகிறது.

தகுதிகள்

  • தொழில் அப்ரண்டிஸ் பிரிவில் உள்ள அந்தந்த தொழிற்பிரிவில் 2 ஆண்டுகள் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவிக்கு அந்தந்த பொறியியல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு அப்ரண்டிஸ் பதவிக்கு BBA/B.A/B. Com/B.Sc ஆகிய பட்டப்படிப்புகளை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தியன் ஆயில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 31.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 24 வயது வரை இருக்கலாம். இதில் வகுப்பு பிரிவினருக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு உள்ளது.

தொழிற்பயிற்சி உதவித்தொகை
தொழிற்பயிற்சி சட்ட விதிமுறைக்கு உட்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
இந்தியன் ஆயில் நிறுவன தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதில் இடம்பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பயிற்சிக்கான நியமனம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பயிற்சியின் மூலம் பணிக்கான திறன்களை வளர்த்துகொள்ளலாம். பணி வாய்ப்புகளுக்கு தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதார்கள் தயாராக வைத்துகொள்ள வேண்டிய ஆவணங்கள்

  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • வங்கி கணக்கு மற்றும் காசோலை புத்தகம்
  • ஆதாரிடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
  • கல்வித்தகுதி சான்றிதழ்கள்/ மதிப்பெண் சான்றிதழ்கள்
  • புகைப்படம்

சான்றிதழ் சரிபார்ப்பின்போது இருக்க வேண்டிய ஆவணங்கள்
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
வகுப்பு பிரிவு சான்றிதழ்
செமஸ்டர் மற்றும் டிகிரி சான்றிதழ்
மருத்துவ பரிசோதனை சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இதற்கான அறிவிப்பை https://iocl.com/apprenticeships என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஐடிஐ தகுதி உள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/candidate-login என்ற இணையதளம் மூலமும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/student_register.php என்ற இணையதளத்தில் மூலமும் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் பெறப்பட்ட நிலையில், செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி நிர்ணயிக்கப்படுகிறது.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்08.08.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்05.09.2025
சான்றிதழ் சரிபார்ப்புபின்னர் அறிவிக்கப்படும்

இந்தியன் ஆயிலில் உள்ள தொழிற்பயிற்சி மூலம் பணிக்கான திறன்களை பெற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *