Tue. Oct 14th, 2025

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு / Deadline for student registration in vocational training centers extended until Aug. 31

தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!
தமிழ்நாடு அரசு அறிவிப்பு 💰 வெளிநாட்டு கல்விக்காக ரூ.15 லட்சம் வரை கல்வி கடன் – பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்! / Tamil Nadu Government Announcement 💰 Education Loan up to Rs. 15 lakh for foreign education – Special scheme for backward class students!

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு / Deadline for student registration in vocational training centers extended until Aug. 31

தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.

சரவணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100 சதவீதச் சோ்க்கையை பூா்த்திசெய்யும் வகையில், நேரடிச் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்பயிற்சி நிலையங்களில் பொறியியல் தொழில்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சோ்வோருக்கு தமிழக அரசு மூலம் மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடை, இலவச மூடு காலணிகள் வழங்கப்படுகின்றன. மேலும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய

திட்டங்களின் கீழ் தகுதி வாய்ந்தவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

எனவே, தொழில்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *