Sat. Jul 26th, 2025

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக நாளை தொடங்குகிறது அரசு பேருந்துகளில் முன்பதிவு

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போக நாளை தொடங்குகிறது அரசு பேருந்துகளில் முன்பதிவு

இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளில் ஒன்றான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இப் பண்டிகைக்கு பலதரப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். அதேபோல் சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கான டிக்கெட் முன்பதிவு ரயில்களில் முடிந்ததை அடுத்து தற்போது அரசு விரைவு பேருந்துகளில் நாளை முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு விரைவு போக்குவர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1080 க்கு மேற்பட்ட டீலக்ஸ் ஏசி வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நவம்பர் 7ஆம் தேதிக்கு இன்றும், எட்டாம் தேதிக்கு நாளையும், ஒன்பதாம் தேதிக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளியின் போது வழக்கமாக 4000 மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் இந்த ஆண்டில் 4500 சிறப்பு பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *