ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு – பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு / Important announcement issued by the Department of School Education for those who have written the Teacher Eligibility Examination
கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று, ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
2511 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தகுதி பெற்ற 2500 பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், வழக்கு காரணமாக பணி நியமனம் செயல்படாமல் இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், உடனடியாக பணி நியமன கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதன்படி வரும் 3, 4 ஆம் தேதிகளில், சென்னையில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.