Tue. Jul 22nd, 2025

நிபாவைரஸ்: மாஹேபிராந்தியத்தில்நாளைமுதல் 24ம்தேதிவரைபள்ளிகல்லூரிகளுக்குவிடுமுறை

நிபா வைரஸ்: மாஹே பிராந்தியத்தில் நாளை முதல் 24ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தற்போது நிபா வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறை அடையாளம் கண்டறிந்து கண்காணித்து வருகிறது.

தொற்று பரவலை தடுப்பது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாஹே பிராந்தியத்தில் நாளை முதல் 24 ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *