TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இந்த வருடம் இவ்வளவு காலிப்பணியிடங்களா..?
தற்போது உள்ள காலக்கட்டத்தில் அரசு வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவாக உள்ளது. அதிலும், பெரும்பாலானோர் காத்திருப்பது குரூப் 4 தேர்வுக்காக தான். ஆம், இந்த தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை TNPSC ஆணையமானது வரும் 25 ஆம் தேதி வெளியிடுவதாக முன்னரே தெரிவித்து இருந்தது. மேலும், இம்முறை 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்விற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் தேர்வர்கள் பாடத்திட்டத்தினை நன்கு புரிந்து தெளிவாக படிப்பதே சாலச்சிறந்ததாகும். இவ்வாறு செய்வதன் மூலம் எளிதாக இத்தேர்வினை வென்று விடலாம்.