You are currently viewing அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் பணி: பெங்களூரில் July 3-இல் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் பணி: பெங்களூரில் July 3-இல் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிவீர் வாயு இசைக்கலைஞர் பணி: பெங்களூரில் July 3-இல் ஆள்சேர்ப்பு முகாம்

இந்திய விமானப் படையில் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி பெங்களூரில் தொடங்கி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப் படையின் அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் திட்டத்தின் கீழ் ஆள்சோ்ப்பு முகாம் பெங்களூரில் அமைந்துள்ள 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் வரும் ஜூலை 3 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு இணையவழியில் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் தோ்வுக்கு 2004 ஜன. 2 முதல் 2007 ஜூலை 2-ஆம் தேதி வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா்.

இத்தோ்வுக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசைக் கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும், அவற்றில் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆா்வமுள்ள இளைஞா்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04342296188 மூலம் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் .

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அக்னிவீா் வாயு விமானப்படை (இசைக் கலைஞா்) முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply