Fri. Jul 4th, 2025

புதுச்சேரியில் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரியில் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரியில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட நேரடி ஆட்சேர்ப்பு பணியை தொடங்கியுள்ளது. அதற்காக நடப்பு நிதியாண்டில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை நிதித்துறை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 5,000 காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

புதுச்சேரியில் 5000 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஆண்டு 1,015 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே 600 காலியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பி இருக்கும் நிலையில், மீதமுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறை நடந்து வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *