You are currently viewing வெளிநாடு சென்று படிக்க TOEFL , IELTS , GRE , GMAT ” தேர்வுக்கு அரசு அளிக்கும் பயிற்சி

வெளிநாடு சென்று படிக்க TOEFL , IELTS , GRE , GMAT ” தேர்வுக்கு அரசு அளிக்கும் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL , IELTS , GRE , GMAT போன்ற தகுதித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

பயிற்சி திட்டங்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL , IELTS , GRE , GMAT போன்ற தகுதித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன ?

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை (Engineering and Management) தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ( Pure Science and Applied Science) வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Agricultural Science and Medicine) சர்வதேச வர்த்தகம், பொருளதார, கணக்கியல் நிதி, ( International Commerce, Economic, Accounting Finance) மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், (Humanities, Social Science, Fine Arts, Law and Arts and Science) போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புபவராக இருக்க வேண்டும்.

குடும்ப வருமானம்

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் .

இந்த திட்டத்தில் பதிவு செய்வது எப்படி ?

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply